Sunday, March 16, 2008

மனமது செம்மையானால்

மனமது செம்மையானால் மந்திரங்கள் தேவையில்லை- அகஸ்தியர்
அச்சரப்பாக்கம் அருகே உள்ள தத்தாத்ரேயர் கோவிலுக்கு இளைப்பாற சென்றிருந்தேன். அங்கே கோவில் கட்டுமானப்பணி நடந்துக்கொண்டிருந்தது. அப்போது அந்த கட்டுமான கண்கானிப்பாளருக்கும் குருக்களுக்கும் நடந்த உரையாடலில், கண்காணிப்பாளர் கட்டுமான பணியை செவ்வன செய்யவில்லை என்பது புரிந்தது. அவர் குருக்களிடம் ஆசீர்வாதம் வாங்கையில், அவர் "மனமது செம்மையானால் மந்திரங்கள் தேவையில்லை" என்றார், என்ன ஒரு முதுற்சியான ஆழ்ந்த அர்த்தமுள்ள வாசகம்?
நம் மனமது செம்மையானால், மந்திரங்கள் தேவைதானா? இதன் நேர்கூரக மந்திரங்கள் கூற கூற மனமது செம்மையாகுமா? ஆகுமானால் அம்மந்திரங்கள் எவை? எவையோ அவை அறிந்து செம்மையாக்குவோம்....