Friday, December 09, 2011

இரண்டு நாள் யாத்திரை

இரண்டு நாள் யாத்திரை
அவளிடம் பேச,
காத்திருக்க வேண்டும்
இன்று மாலை வரை
 
பேசும் தொலைவில் அவள் இல்லை
எளிதில் பேச கைபேசி இல்லை
பொது தொலைபேசி சிக்கும் பொது
அவள் கனவுலகில் தொலைந்து சிக்கும் பொழுது
 
பயணத்தில் களைப்பாற்ற நிறுத்தும்
இடைவெளியில் இடைவிடாது
தொலைபேசியை துளாவியது கண்கள்
 
கிட்டயும் பயனில்லை
மறுமுனையில் அவளில்லை
வெள்ளி முடிந்து
வெள்ளி முளைக்கும் வரை
வெறுத்திருக்க வேண்டும்
பொழுதை மறந்திருக்க வேண்டும்
 
கண்வரை அவளிருந்ததால்
தொடர்ச்சியை கண்களில் தூக்கமில்லை
கனவுகளிலும் அவளில்லை
 
விடிகாலை விடிவு வரும் என
வீதிகளில் விதியற்றவன்போல்
பொது தொலைபேசியை தேடி
அலைந்தேன் ஒரு கடையும் திறக்கவில்லை!
புதிய ஊரை சாடியும் பயனில்லை!
 
ஒன்றரை நாள் கழித்து பேச
இரண்டரை மைல் நடந்து, தொலைபேசியில்
மூன்றரை நிமிடம் கழித்து,
நான்கரை கட்டையில், ஹலோ என்றாள்-தூக்ககலக்கத்தில்
ஐந்தரை அங்குலம் விரிந்தது என் உதடுகள், அவள் குரல் கேட்டு
 
விரிந்து என்ன பயன்?
என் குரல் அவளுக்கு விளங்கவில்லை!
எனக்கிருந்த ஏக்கம் அவளுக்கில்லை
பேச்சில் சுரத்தில்லை -ஏமாற்றத்தில்
அப்புறம் என்றேன்!
விழுப்புரம் என்றுரைக்காமல்
ஏதோ வெட்டியாய் சில நிமிடங்கள்
ஏக்கத்துடன் பேசினேன்-அழைப்பை துண்டிதபின்
ஏமாற்றத்தில் முகத்தில் அசடுகள் சில வடித்தேன்

நான் சொல்லவா வேண்டும்?

இன்பம் துள்ளும்போதும் துன்பத்தில் நொந்தபோதும்
உன்னை இறுக்கி அணைக்க ஏன் தோன்றவேண்டும்?

வம்பு தும்பு முதலில் சொல்ல
மனம் உன்னை மட்டும் ஏன் நாடவேண்டும்?

கள்ளம் கள்ளம் குறும்பு செய்ய
எந்தன் கைகள் உன்னிடையை ஏன் தேடவேண்டும்?

நட்டநடு கும்பலுக்குள்ளும் இரகசியம் பேச
நம் இருவர் கண்கள் ஏன் மோதவேண்டும்?

ஊடல் தினம் நாம் கொண்ட போதும்
அருகில் நீ இல்லையென்றால் மனம் ஏன் நோக வேண்டும்?

நாள்முழுதும் உன்கூட இருந்தபோதும்
விட்டுப்பிரிய  ஏன் கசக்க வேண்டும்?

கேள்வி பல, விடை ஒன்று அது உன்மீது
நான் கொண்ட காதலென்று நான் சொல்லவா வேண்டும்?

Thursday, December 01, 2011

How to pray to God- By Thirugayana Sambandar

ஒல்லையாறி உள்ளம் ஒன்றிக் கள்ளம் ஒழிந்து வெய்ய
சொல்லையாறித் தூய்மை செய்து காமவினை அகற்றி
நல்லவாறே உன்றன் நாமம் நாவில் நவின்று ஏத்த
வல்லவாறே வந்து நல்காய் வலிவலமே யவனே ( திருமுறை 1-50)

ஒல்லையாறி- Controling those thoughts that impact external world and looking inward
உள்ளம் ஒன்றி - with concentrated mind
கள்ளம் ஒழிந்து- Even after practicing such control and concentration, at times, our naughty mind that has been hitherto wavering uncontrollably, would tend to get

attracted towards materialistic pleasures and therefore we have to remove such naughty materialistic attraction
வெய்ய சொல்லையாறி- When we are in the process of above three, we may tend to experience some improvement in the self (both spritual and Materialistic).

however, once again our untrained mind, will tend to compare self with others. Since there has been some conginzable improvements, one may get feeling of

greateness and start finding faults with others and become sarcastic. தூய்மை செய்து- Such behaviour should be carefully avoided.
காமவினை அகற்றி- Removing all attractions towards the materialistic and worldly pleasures
நல்லவாறே உன்றன் நாமம் நாவில் நவின்று ஏத்த வல்லவாறே வந்து நல்காய் வலிவலமே யவனே- guide thus to get a proper way to utter the name and proper way

to pray