Thursday, August 30, 2007

ஏழையின் சிரிப்பு!!

புதுசாய் கிடைத்த பழையத் துணி
அழகாய் தைத்த கிழிந்த துணி
ஓவியன் அறியா பல வண்ணம்
வரமாய் பெற்றது அந்த துணி

குளித்த ஈரத்தில் தலைச் சீவி
நீண்ட மீசையை வீரமாய் முறுக்கி
பற்கள் மட்டுமே பளிச்சென அமைய
அதற்கிணையாய் நேற்றியில் திருநீர் அனிந்து
அவனறிந்த மறை ஓதி
கந்தலனிந்தாலும் கந்தனை வணங்கி
குவள நீரில் பசியாறி
பணியில் பலர் பார்வையில்
அவன் புதிய துணியில் பூரிப்பு
அனைத்திலும் அழகாய் அவ்வேழையின் சிரிப்பு!!

No comments:

Post a Comment